Posts

என் மகள்

தந்தை இல்லாத என்மகள் அவள் வயது ஒத்த பெண் தந்தையிடம் விளையாடும் தருணத்தில் , தவிக்கும் மனப்போராட்டத்தில் தலை குனிகிறாள்.

மனிதனாக வாழ்ந்திடு

இளைஞனே, என்ன படித்தாய்? பட்டத்திற்கும், வேலைக்குமா கல்வி? நீ கற்ற கல்வியின் பயன் என்ன? தமிழ் படிக்கவில்லையோ? செய்யற்க, இன்னுயிர் நீக்கும் வினை என்ற குறள் கற்கவில்லையோ? தமிழனே, தமிழைப்படி அற இலக்கியத்தில் ஆயிரம் கருத்துக்கள் அள்ளி எடுக்க உள்ளன!  கற்பவை கற்றபின் நிற்க  அதற்குத் தக !  வள்ளுவரின் வார்த்தைப்படி வாழ கற்றுக்கொள் !  நீ படித்தவனா? என்ற கேள்வியைப் பிறர் எழுப்ப விடாதே நான் படித்தவன் என்பதை வாழ்வில் வாழ்ந்துகாட்டு மனிதனே, மனிதநேயம் வளர்த்துக்கொள் இந்த நொடி இவ்வுலகில் வாழ்கிறோம் அடுத்த நொடி உடலில் உயிர் நிலைக்குமா?  தெரியாத உலகில் வாழ்கிறோம் - இதில் சாதி, மதம் வேறுபாடு எதற்கு? மனிதனே,  மனிதனாக வாழ்ந்திடு! !!

புது வாழ்வு

காற்றின் அசைவில் காலமான வேப்பம்பூ சாளரம் வழியாக சடுதியில் நுழைந்தது மேசை மீது அழகுக்காக மென்மையுடன் அமர்ந்தது! !!!

முல்லையின் கேள்வி

பகலில் என்னை சூடாமல் இரவில் சூடுவதின் காரணம் என்னவோ??  மானிடப் பார்வையில் என் மனம் வாடாமல் இருக்கவே என்றேன்! !!

இறைவன் அளித்த தண்டனை

அவர் இருந்திருக்கலாம் இருந்திருக்கலாம்..... என்ற எண்ணப் போராட்டம் எழும்பொழுதெல்லாம், ஏன்? ஏன்?  ஏன் கடவுளே எடுத்துக்கொண்டாய்? என்ற கேள்வி எழுகிறது!   என்மகள் அப்பாஎன்று அழைக்க முடியாத அவலநிலை ! தந்தை பாசம்தேடும் கண்ணீர்த் துளிகள்  அவள் விழியில் காணும் போது அவர் இருந்திருக்கலாம்... !

மன மகிழ்வு

தனிமையில் இருப்பவன் உறவைத் தேடுகிறான் உறவோடு உழல்பவன் தனிமையை நாடுகிறான் அவரவர் சிந்தையின் தெளிவில் மனமகிழ்வு அடங்கியுள்ளது

புரியவில்லை

பூவைப் பறித்தேன் பூவோடு சேர்ந்து இரு மொட்டுக்களும் வந்துவிட்டது! !  கவனமாகப் பறித்திருந்தால் தவிர்த்திற்கலாம் - இது  என் குற்றமா??  இறைவன்  சித்தமா? ?